Friday, August 13, 2010

மாபெரும் விளையாட்டு விழா





இன்பர்சிட்டி காண்டீபன் விளையாட்டுக்கழகத்தினர் நடத்தும் 33ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டு விழா

காலம் : 27.08.2010 முதல் 29.08.2010 வரை

இடம் : இன்பர்சிட்டி காண்டீபன் விளையாட்டு மைதானம்

திறந்த போட்டி நிகழ்வுகள்

கடல் நிகழ்வுகள்

  • நீச்சல்
  • கட்டுமரம் வலித்தல்
  • படகோட்டம்

வீதி நிகழ்வுகள்

  • மரதன் ஓட்டம் (ஆண்கள், பெண்கள்)

மைதான நிகழ்வுகள்

  • மல்யுத்தம்
  • குத்துச்சண்டை
  • கராத்தே (காட்டா, சண்டை)
  • கயிறு இழுத்தல் (இருபாலாருக்கும்)
  • கிறீஸ் கம்பம் ஏறுதல்
  • தலையணைச்சண்டை
  • பாரம் தூக்குதல்

விண்ணப்ப முடிவுத்திகதி : 10.08.2010

மேலதிக விபரத் தொடர்புகளுக்கு

இன்பர்சிட்டி தொழிலாளர் கூட்டுறவுச் சங்கக் காரியாலயம்

இன்பர்சிட்டி

தொ.பே : 021 226 4164, 077 0782795

Monday, August 9, 2010

இன்பர்சிட்டி வருடாந்த ஒன்று கூ டல் 2010





இன்பர்சிட்டி வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும் 2010
புகைப்படங்களைப் பார்க்க இவ்விணைப்பினை அழுத்தவும்.

http://picasaweb.google.com/101285161504086608661/ciitvH#

Sunday, August 1, 2010

ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும் 2010

இன்பருட்டி மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டிப் போட்டியும் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி (01/08/2010) அன்று Canada Toronto விலுள்ள West Deane park இல் இடம் பெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இன்பருட்டி மக்களும் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.

விளையாட்டுப் போட்டியுடன் B B Q , ஒடியற் கூழ் என்று அமர்க்களப் பட்வுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் அறியத் தருகின்றார்கள்.

Park அமைந்துள்ள இடம் 142 Martin grove south , Etobicoke .

தொடர்புகட்கு :

ஜெயக்குமார் - 416 5004904

கண்ணன் அண்ணா - 4168769683

நந்தம் அண்ணா -416 9010109

Wednesday, December 23, 2009

இன்பருட்டியின் சகோதர ஊர்கள் உலக அளவில்

Gjøvik


Loikkaa: valikkoon , hakuun Jump to: navigation, search
Gjøvik Kommune Gjøvik Kommune
Gjovik komm.png
NO 0502 Gjøvik.svg
vaakuna Coat of Arms sijainti location
Sijainti Location 60,52 N 10,31 E 60.52 N 10.31 E
Valtio State Norja Norway
Lääni County Oppland Oppland
Perustamisvuosi Founded 1861 (kaupungiksi 1964 ) 1861 (a city of 1964)
Väkiluku Population 18000 (tilanne 2007 ) 18000 (situation in 2007)
Pinta-ala Surface 672 km² 672 km ²
Väestötiheys Population Density 44 as./km² 44 sq mi / km ²
Korkeus Height 842 m 842 m
Sivusto Site gjovik.kommune.no gjovik.kommune.no

Gjøvik on kaupunki Norjassa Opplandin läänissä . Gjøvik is a city in Norway, Oppland County.

History

Gjøvik erottautui omaksi kunnakseen Vardalista, vuonna 1861. Gjøvik erottautui own Kunnas Vardalista, in 1861. Se sai kaupunkioikeudet vuoden 1964 alussa. It received city rights in 1964 at the beginning.

Geography

Gjøvik on yksi kolmesta kaupungista, jotka ympäröivät Mjøsaa , Norjan suurinta järveä. Gjøvik is one of three in a city which is surrounded by Mjøsa, Norway's largest lake. Gjøvik on Norjan 24. Gjøvik Norway has 24 suurin kaupunki väkiluvussa mitattuna ja 165. the largest city in population terms, and chapter 165 suurin pinta-alassa mitattuna. the largest surface area measured.

Kaupungin korkein kohta on Rinsgurdåsen, joka on 842 metrin korkeudessa. The city's highest point is Rinsgurdåsen, which is 842 meters in altitude.

Sister Cities

Gjøvikilla on viisi ystävyyskaupunkia: Gjøvik has five sister cities:

தண்ணீருள் தாண்டிருக்கும் கிணறும் கண்ணீருள் கரைந்திருக்கும் உறவுகளும்


தண்ணீருள் தாண்டிருக்கும் கிணறும் கண்ணீருள் கரைந்திருக்கும் உறவுகளும்
இன்பர்சிட்டி கிராம அபிவிருத்தி சன சமூக நிலைய பொது நோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளோர்



சக்கோட்டை சவேரியார் தேவாலயத்தில் தங்கியுள்ளோர்மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பொலிகண்டி மேற்கு செம்மீன் பலநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ள மக்கள்

அறிவித்தல்


இத்தளத்தை நல்ல முறையில் வடிவமைத்துத் தரக்கூடியவர்கள் தொடர்பு கொள்ளவும். இது ஒரு சேவை நோக்கம் கொண்ட தளம்.

Thursday, March 5, 2009

வாருங்கள்




என் அருமை இன்பருட்டி மக்களே உலகத்தின் மூலை முடுக்கெங்கும் காலச் சூறாவளியின் வீச்சில் வீசியெறியப்பட்டிருக்கும் நாம் அனைவரும் ஒன்றிணையும் களமாக "இன்பருட்டி"ஐ பயன் படுத்துங்கள்.

நம் ஊர் பற்றிய மக்கள் பற்றிய தற்கால நினைவுகளையும் நிகழ்வுகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு தரவேற்றம் செய்து கொள்ளுங்கள்.

நம் ஊர் குறித்த அனைத்துச் செய்திகளையும் உலகத்தின் கரைகளில் ஒதுங்கியிருக்கும் நம்மவர் அனைவரும் அறிந்து கொள்ள "இன்பருட்டி"ஐ களமாக்குங்கள்.

அனைவரும் இங்கு ஆக்கதாரர்களாக இணைந்து கொள்வோம். வாருங்கள்.

Saturday, December 6, 2008

எம்மூர் பிரசிடெண்டு


எம்மூரிலும் ஒரு பிரசிடெண்டு இருந்தார். பிரசிடெண்டு ஆகாமலே பிரசிடெண்டாக இருந்தது தான் கதையே. எம்மூரின் வீ சி மெம்பராக பல முறை வாக்குக் கேட்டு அத்தனை முறையும் தோத்த அந்த பிரசிடெண்டைப் பார்க்கும் போதும் அல்லது அவரைப்பற்றிக் கதைக்கும் போதும் பதினாறு முறை படையெடுத்துத் தோர்த்து இறுதியில்வெற்றி கொண்ட நூர்முகம்மதுவின் கதையை எங்கம்மா எனக்குச் சொல்லப்போக எனது கதாநாயகனாக நூர் முகம்மது ஆகிப்போனது என்னவோ உண்மைதான். பின் என்ன ..எத்தனை காரியங்களில் இறங்கினாலும் எத்தனை பேர் முதல் தரமே வெற்றிக்கனியைச் சுவைத்தவர்கள் நம்மிடையே இருக்கின்றோம். ஆனாலும் நமது ரத கஜ துரக பதாதிகளைத் தட்டிக் கொடுக்கவும் நமக்கு நாமே உற்சாகம் கொடுத்துக் கொள்ளவும் நமது நூர்முகம்மதுவை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள்.

நூர்முகம்மதுவின் நேரிடை வாரிசாகவே இந்த பிரசிடெண்டையும் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் எலக்ஷன் கேட்ட காலங்களிலெல்லாம் நான் மிகவும் சின்னப்புள்ளையாக பக்கத்தில் அயலூரில் இருந்த றோ.க.த.க. தமிழ் கலவன் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன்.

எலக்க்ஷன் காலத்தில் எல்லாம் "போடு புள்ளடி தர்மரத்தினத்துக்கே" என்ற கோஷத்துடன் நாங்களும் ஐக்கியமாகி விடுவோம். என்ன சின்னத்தில் கேட்டார் என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. அதனால் என்ன? அவர் கேட்டார் ..நாங்கள் இன்னும் மறக்காமல்; இருக்கின்றோம் என்பது தானே முக்கியம். இன்று உலக அரசியலையெல்லாம் கரத்துக் குடித்துவிட்டிருக்கும் நிலையிலும் ந்மக்குள் அரசியல் என்னும் விதையை விதைத்த அந்த பிரசிடெண்ட் தர்மரத்தினமும் எங்கள் ஊரும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்த துரைரத்தினம் பற்றியும் போடு புள்ளடி வீட்டுக்கு நேரே என்று கோஷ்ம் இட்டு வோட்டுக் கேட்ட தமிழரசுக்கட்சியும் இது எலாவற்றுக்கும் மேலாக மெத்தப்படித்து உத்தியோகம் பார்த்த என் ஹீரோ அப்பா சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் நடராசாவிற்கு வோட்டுப் போடச் சொல்லி என் வீட்டுப் பாட்டியை ஒழுங்கு செய்த ஊரோடு ஒத்துப்போகாத என் புரட்சியை அல்லது அந்த வயசிலேயே எனக்கிருந்த மமதையைப் பற்றிச் சொல்லவா? எதையோ பற்றிச் சொல்லப்போகின்றேன். என்னூர் இன்பருட்டியூரின் அரசியல்வாதிகள் எல்ல்ல்ல்ல்லாம் எனக்கெதிராக செய்யப்போகும் புரட்சி எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது இப்போதே அரசல் புரசலாகத் தெரிகின்றது. புரட்சியென்றால் வெடி வெடிப்பது தானே ..வெடிக்க வைத்திடுவோமே... (தொடரும்)

Friday, November 28, 2008

Y's men og Inparuddy


Y's and but's but InparuddyY and Inparuddy


In the evening, Friday we got off on the meeting of the Y's Men. First there was the usual dinner. Day Asmund was not sure where he would sit, until we realized that the most important thing was to sit so that he could reach much of the rowan the point. Because it can be eaten as is well known ... Then there was video from Inparuddy and as well work there, in Sri Lanka after the tsunami. Then we were told Janini there who spoke Tamil. She was interpreted into English, and for the children's sake, it was also interpreted to norsk.Og finally we got the remnants of the dinner to Sunday noon. Yes, it tasted delicious, and is a great Sunday noon

எம் அயலூர் அமரத்துவம்


இன்பர்சிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வரலாறு





அகன்று பரந்த பரப்பில் அமைந்த ஆண்டவனை அகங்குளிரக் காணும் அமைதி பொருந்திய அகமே ஆலயம். பசுவின் உடலெங்கும் பரந்த இரத்த அம்சம் முலையினூடாக பாலாக வெளிப்படுவதைப் போல இப்பாரெங்கும் பரந்துள்ள பரம்பொருள் ஆலயத்தின் வாயிலாக ஆன்மாக்களுக்குத் தென்படுகின்றார். ஆக, ஆலயத்திற்கு அதன் அமைப்பிற்கு ஆன்மீகத்தில் முக்கிய பங்குண்டு. இந்தவகையில் எமது திருநாட்டின் கல்விக்கடலின் கரையாக விளங்கும் வடமராட்சி எனும் புண்ணிய பூமியில் வயற்கடல் சூழ்ந்த எழிலும் வனப்பும் மிகுந்த தலமாக கற்பூர விநாயகர் ஆலயம் மிளிர்கின்றது. வயல்களுக்கு மத்தியில் அமைந்த ஆலயம் இயற் கையிலேயே சோலையாக பார்ப்போரைப் பரவசப்படுத்துகின்றது. இவ்வாறு சிறப்புற்று விளங்கும் கற்பூர விநாயகரின் தோற்றத்தை ஒருகணம் நினைத்துப் பார்க்கையில் இங்கையில் ஒல்லாந்தரின் ஆட்சி நடைபெற்ற காலம் அது, 1765 ஆம் ஆண்டு. இக்காலப்பகுதி விநாயகப் பெருமானின் அருட்பிரவாகம் வெளிப்பட்ட காலமாகத்திகழ்கின்றது. உயர்ப்புக் கலட்டி என அறியப்பட்ட இடத்தில் ஓர் ஆலமரத்தடியில் பெரியார் ஒருவர் தியானத்தில் அமர்ந்திருக்கின்றார். ஏற்கனவே அழிந்துபோன ஆலயத்தின் எச்சங்கள் ஒருபுறம் காணப்படுகின்றன. அந்நேரம் ஆச்சரியம் மேலிட ஒரு நிகழ்வு நடந்தது. ஒல்லாந்த அதிகாரி ஒருவர் குதிரையில் டாம்பீக உலாவாக அவ்வழி வரும்வேளை பெரியார் தியானத்தில் அமர்ந்திருந்த ஆலமரத்தின் உயர்ந்த கொப்பில் சோடிப்புறா இருக்கக் கண்டார். அதிகாரியின் துப்பாக்கிக்கோ ஆணவப்பசி. குதிரையிலிருந்தவாறே புறாவைக் குறிபார்த்து சுட்டார். விரைந்தது குண்டு, ஆனால் புறாக்கள் அசையாது இருந்தன. ஆச்சரியத்துடன் பயம் கொண்ட அநத ஒல்லாந்த அதிகாரி குதிரையிலிருந்து குதித்து ஆலமரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்த நீலக்குட்டியார் அருகில் சென்றார். காரணம் கேட்டு கை கட்டி நின்றார் அதிகாரி. நீலக்குட்டியாரோ தனது மொழித்திறனால் அழிந்த ஆலயத்தின் வரலாற்றைக் கூறி விநாயகரின் பெருமையை எடுத்துரைத்தார். பெருமானின் பெருமை தனை அனுபவரீதியாக உணர்ந்த ஒல்லாந்த அதிகாரி விநாயகப் பெருமானுக்கு ஆலயம் அமைத்திட அனுமதி கொடுத்து விநாயகப் பெருமானின் திருவருளுக்கு பாத்திரமானார். இந் நிகழ்வின் பின்னர் நீலக்குட்டியாரின் முயற்சியால் ஆலயம் தோற்றம் பெற்றது. இவ் ஆலயத்திற்கு விக்கிரகம் தேவைப்படவே செய்வதறியாது நிற்கும் வேளையில் நல்லூர் நாயன்மார்க்கட்டு எனும் இடத்தில் அவ் ஊர்ப் பெரியார் ஒருவர் குளம் வெட்டிய வேளை வெட்டிய இடத்தில் குருதி பாய்வதைக் கண்ட வேலையாட்கள் குளம் வெட்டுவதை நிறுத்தி தம்மிடம் சென்றனர். பின்னர் இரவு குளம் வெட்டிய பெரியாரின் கனவில் பெருமான் தோன்றி இவ்விடத்திலிருந்து வருவோரிடம் தம்மை ஒப்படைக்கும் படியும், அவ்வாறே இவரிடமும் எம்மை அங்கிருந்து அழைத்து வந்து வழிபடும் படியும் திருவாக்கருளினார். அவ்வாறே செய்யப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டையின் பின்னர் ஞானியார் என்பவர் நித்திய வழிபாடுகளை இயற்றி வந்தார். இவ்வாறு வழிபாடாற்றி வரும் வேளையில் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலத்தில் ஏனைய பொருட்களைப்போல கற்பூரத்திற்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படவே ஞானியார் உள்ளம்நலிந்தார். பெருமான் ஞானி யார் கனவினில் தோன்றி இங்குள்ள ஆலமரத்தடியில் குறித்த இடத்தில் தோண்டினால் பச்சைக்கற்பூரம் கிடைக்கும் என்றும் தேவையானதை எடுத்து ஆராதனை செய்வாயாக என்றும் அருளிச் செய்தார். இவ்வாறு கற்பூரம் விளைவித்து அற்புதம் நிகழ்த்தியமையால் " கற்பூர விநாயகர் " என நாமம் வரலாயிற்று. இதன் பிற்பாடு வேதாரணியத்திலிருந்து இலங்கைக்கு வந்திருந்த சைவாச்சாரியார் ஒருவர் வழிபாட்டுக்கு நியமிக்கப்பட்ட பின்னர் அவரின் பரம்மரையினர் முப்பொழுதும் திருமேனி தீண்டி தொண்டாற்றி வருகின்றனர். தலவிருட்சமாக விளங்கிய ஆலமரம் மறையவே அவ் விடத்தில் தோன்றிய தற்போதுள்ள புன்னை மரம் தலவிருட்சமாக வளர்ந்து சிறப்புற்று இருக்கின்றது. இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தச் சிறப்போடு அருள் தந்து ஆட்சிபுரியும் ஆனைமுகனுக்கு ஆவணிமாதம் பூரணை நாளை அந்தமாக் கொண்ட பத்து தினங்கள் பிரம்மோற்சவம் சிறப்புற நடைபெற்று வருகின்றது. கடல்வளமான நெய்தல் நிலமும் மருத நிலமும் பனை வளமும் சார்ந்த இயற்கை வனப்பின் நடுவே அருள்பாலித்து எழிலுற காட்சி தருகின்றார் கற்பூரவிநாயகர்.

கண்ணீரைக்கடந்து























'அம்மா.... இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா.....' மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்...... இன்பருட்டி 'வான்' அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த 'வான்' அதிர்ந்துகொண்டிருந்தது.
அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலையில் விழுந்தது. பொறுப்பாளர் அன்புவை அழைத்தார். 'அன்பு.... நீதான் அவர்கள எப்படியாவது அமைதிப்படுத்த வேணும்.....' அன்பு முதலில் தயங்கினாலும், நிலைமையைப் புரிந்தவனாய் தன் அம்மாவோடும், உறவுகளோடும் போய்க் கதைத்தான்.
அம்மா மகனைக் கட்டிப்பிடித்து அழுதா..... காலில விழுந்து கும்பிட்டா..... 'தம்பி கரும்புலியாப் போகாதையடா....' உடன்பிறப்புக்களோ அவன் கையையும் காலையும் கட்டிப்பிடித்தபடி நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அன்புவிடம். திருவள்ளுவர் சொன்ன கூற்று அவன் மனத்திரையில்...
'பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்'
அவன் முடிவெடுத்தான். 'நான் கரும்புலியாப் போகேல்லையெண....' அம்மா கேட்டபடி ஊர்க்கோயில்கள் எல்லாவற்றின் மீதும் 'சத்தியம்' செய்தான். பொய்யே பேசாத அவன் பொய்ச் சத்தியம் செய்யுமளவிற்கு சூழ்நிலைக் கைதியானான். அம்மா நம்பிக்கொண்டு வீட்டுக்குப்போக முற்றுகையிட்ட உறவுகள் பின்னாலே... ஒருவாறாக அன்பு என்ற பெருமழை ஓய்ந்து போக அன்பு சிரித்தபடி போராளிகளிடம் வந்தான். போராளிகளின் விழிகள் கசிந்திருந்தன. உலகில் எந்தவொரு உயிரினமும் ஆழமாய் அன்பு செலுத்துவது 'அம்மா' என்ற தாய்மையில்தான் எவ்வளவுதான் மனவுறுதி படைத்தவனாக இருந்தாலும், அம்மாவின் கண்ணீர் அவனை ஆட்டங்காணச் செய்துவிடும்.







ஆனால், அன்புவோ.... தான் விரும்பித் தேர்ந்தெடுத்த கொள்கையில் இருந்து சற்றும் தளரவில்லை. தனது தாய், உறவுகள் என்ற குறுகிய வட்டத்திற்காக நமது தாய் மண்மீது அவன் வைத்த பற்றுதலைத் துறக்கத் துணியவில்லை.
20-09-1995, இன்பருட்டி வான் கலகலக்கத் தொடங்கியது. அன்புவை வேவு பார்த்துக் கொண்டிருந்த தம்பி தகவல் சொல்ல அம்மாவிடம் ஓடினான். 'அம்மா... நேற்றைக்கு நிண்ட படகிலதான் அண்ணா நிக்கிறானெண....' அம்மாவுக்குள் எரிமலை.... இன்பருட்டி வானை நோக்கி அம்மா ஓடினாள். இன்பருட்டிக் கரையில் அம்மாவின் தலைக்கறுப்பைக் கண்ட அன்பு படகிற்குள் மறைவாக இருந்தபடி எல்லோரையும் பார்த்தான். தலையிலும் வயிற்றிலும் அடித்தடித்து அம்மா மண்ணில் புரண்டு அழுதாள். உடன்பிறப்புக்களும் ஏதேதோ சொல்லி அழுதார்கள்.





படகின் பொறி ஓசையை மீறி அவர்கள் சொல்லி அழுவது மட்டும் புரியவில்லை. ஆனால், அவர்கள் துடித்து அழுவது மட்டும் அன்புவின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது. தாயின் மீதும், உடன்பிறப்புக்கள் மீதும் அன்பு வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாய் அன்புவின் கண்களிலும் நீர்த்திரை. எத்தனையோ மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான அவன் பயணம்... அன்பு உறவுகளின் கண்ணீரைக் கண்டு தடைப்பட்டுப் போகவில்லை. அவன் பயணம் கண்ணீரைக் கடந்துசென்று வென்றது